நேற்று மாலை இரண்டு கார்களில் மின்வாரிய ஊழியர்கள் நவமலை சென்றுள்ளனர். அப்போது, ஒற்றை ஆண் காட்டு யானை இரண்டு கார்களையும் வழிமறித்து தாக்கியது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு அருகே நவமலை வனப்பகுதியில், மின் வாரியத்திற்கு சொந்தமான அலுவலகம் மற்றும் பழங்குடி கிராமம் அமைந்துள்ளது. கோவை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து செல்லும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு பணிகளை மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில்,நேற்று வழக்கம்போல் மாலை இரண்டு கார்களில் மின்வாரிய ஊழியர்கள் நவமலை சென்றுள்ளனர். அப்போது, நவமலை அருகே சென்றபோது போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை இரண்டு கார்களையும் வழிமறித்துதாக்கியது.ஒரு கார் முன்னோக்கி வந்த நிலையில், சரவணன் என்பவர் வந்த மற்றொரு காரை சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது.
இதையடுத்து, காரை தொடர்ந்து புரட்டிப் போட முயன்றுள்ளது. அதேபோல், மற்றொரு காரையும் துரத்திச் சென்ற ஒற்றை காட்டு யானை அந்தக் காரையும் தாக்கியது. இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி வனத்துறையினர் விரைந்து வந்து, கார்களை தாக்கிக் கொண்டிருந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதையடுத்து காரில் காயங்களுடன் இருந்தமின்வாரிய ஊழியர் சரவணன் (49) என்பவரை மீட்டு ஆழியார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதேபோல், அங்கு வந்த அரசு பேருந்தையும் ஒற்றை காட்டு யானை வழிமறித்து தாக்க முயன்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில்,நேற்று வழக்கம்போல் மாலை இரண்டு கார்களில் மின்வாரிய ஊழியர்கள் நவமலை சென்றுள்ளனர். அப்போது, நவமலை அருகே சென்றபோது போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை இரண்டு கார்களையும் வழிமறித்துதாக்கியது.ஒரு கார் முன்னோக்கி வந்த நிலையில், சரவணன் என்பவர் வந்த மற்றொரு காரை சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது.
இதையடுத்து, காரை தொடர்ந்து புரட்டிப் போட முயன்றுள்ளது. அதேபோல், மற்றொரு காரையும் துரத்திச் சென்ற ஒற்றை காட்டு யானை அந்தக் காரையும் தாக்கியது. இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி வனத்துறையினர் விரைந்து வந்து, கார்களை தாக்கிக் கொண்டிருந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
இதையடுத்து காரில் காயங்களுடன் இருந்தமின்வாரிய ஊழியர் சரவணன் (49) என்பவரை மீட்டு ஆழியார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதேபோல், அங்கு வந்த அரசு பேருந்தையும் ஒற்றை காட்டு யானை வழிமறித்து தாக்க முயன்றது என்பது குறிப்பிடத்தக்கது