மாநில அரசுக்கு ஆணவ படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதால் முதல்வர் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
கோவை: ஆணவ படுகொலைக்கு எதிராக தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற 5-மாநில தேர்தலில் பாஜக 4-மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதை வைத்து தென் இந்தியாவிலும் ஆட்சியைப் பிடிப்போம் என பேசிக் கொள்கிறார்கள். ஆனால் கடந்த தேர்தலை விடச் சரிவையே கண்டுள்ளது பாஜக. காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளோடு ஒருங்கிணையவில்லை. மத உணர்வுகளை பாஜக அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது. இது மிகவும் அச்சுறுத்தலான செயல் என தெரிவித்தார்.

மதச் சார்பற்ற கட்சிகள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டும், இன்னொரு முறை பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மற்ற கட்சிகள் வாய்ப்பளிக்கக் கூடாது. ஆணவ படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும்.
மாநில அரசுக்குச் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதால் முதல்வர் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாஜக ஆணவக் கொலைகளுக்குத் துணை நிற்கிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற 5-மாநில தேர்தலில் பாஜக 4-மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதை வைத்து தென் இந்தியாவிலும் ஆட்சியைப் பிடிப்போம் என பேசிக் கொள்கிறார்கள். ஆனால் கடந்த தேர்தலை விடச் சரிவையே கண்டுள்ளது பாஜக. காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளோடு ஒருங்கிணையவில்லை. மத உணர்வுகளை பாஜக அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது. இது மிகவும் அச்சுறுத்தலான செயல் என தெரிவித்தார்.
மதச் சார்பற்ற கட்சிகள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டும், இன்னொரு முறை பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மற்ற கட்சிகள் வாய்ப்பளிக்கக் கூடாது. ஆணவ படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும்.
மாநில அரசுக்குச் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதால் முதல்வர் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாஜக ஆணவக் கொலைகளுக்குத் துணை நிற்கிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.