ஆணவ படுகொலைக்கு எதிராக தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்

மாநில அரசுக்கு ஆணவ படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதால் முதல்வர் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.


கோவை: ஆணவ படுகொலைக்கு எதிராக தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற 5-மாநில தேர்தலில் பாஜக 4-மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதை வைத்து தென் இந்தியாவிலும் ஆட்சியைப் பிடிப்போம் என பேசிக் கொள்கிறார்கள். ஆனால் கடந்த தேர்தலை விடச் சரிவையே கண்டுள்ளது பாஜக. காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளோடு ஒருங்கிணையவில்லை. மத உணர்வுகளை பாஜக அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது. இது மிகவும் அச்சுறுத்தலான செயல் என தெரிவித்தார்.



மதச் சார்பற்ற கட்சிகள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டும், இன்னொரு முறை பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மற்ற கட்சிகள் வாய்ப்பளிக்கக் கூடாது. ஆணவ படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும்.

மாநில அரசுக்குச் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதால் முதல்வர் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாஜக ஆணவக் கொலைகளுக்குத் துணை நிற்கிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...