கோவை கணபதி அருகே பைனான்சியர் வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகை திருட்டு..!

பின்பக்கக் கதவில் பதிவான ரேகைகளை சேகரித்து சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவையில் பைனான்சியர் வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை கணபதி வரதராஜுலு நகரை சேர்ந்தவர் தங்கபிரபு (30). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தங்கபிரபு தனது குடும்பத்துடன் வால்பாறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டிலிருந்த பீரோ திறக்கப்பட்டு துணிகள் கலைந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் உள்ளே இருந்த சுமார் 7 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து, வீட்டின் பின்னால் சென்று பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தங்கபிரபு சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பின்பக்கக் கதவில் பதிவான ரேகைகளை சேகரித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...