பின்பக்கக் கதவில் பதிவான ரேகைகளை சேகரித்து சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் பைனான்சியர் வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை கணபதி வரதராஜுலு நகரை சேர்ந்தவர் தங்கபிரபு (30). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தங்கபிரபு தனது குடும்பத்துடன் வால்பாறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டிலிருந்த பீரோ திறக்கப்பட்டு துணிகள் கலைந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் உள்ளே இருந்த சுமார் 7 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.
இதையடுத்து, வீட்டின் பின்னால் சென்று பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தங்கபிரபு சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பின்பக்கக் கதவில் பதிவான ரேகைகளை சேகரித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.