கோவை தொண்டாமுத்தூர் அருகே கேட்டரிங் மாஸ்டருக்கு அரிவாள் வெட்டு - ஓட்டல் உரிமையாளர், தொழிலாளி கைது..!

மதுபான கடையில் ஏற்பட்ட மோதலில் ஓட்டல் உரிமையாளர் மற்றும் தொழிலாளர் கேட்டரிங் மாஸ்டரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதால் பரபரப்பு.


கோவை: கோவையில் கேட்டரிங் மாஸ்டரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் ஓட்டல் உரிமையாளர் மற்றும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் அருள் ஜோதி நகர் பகுதியில் குடியிருப்பவர்கள் ராஜசேகர் (42). இவர் கேட்டரிங் மாஸ்டர். இவருடன் ஜெகதீஷ் (32) மற்றும் பிரகாஷ் என்பவர் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, தொண்டாமுத்தூர் போளுவம்பட்டி பிரிவு அருகில் ஒரு ஓட்டலை ராஜசேகர் லீசுக்கு எடுத்ததாக தெரிகிறது. அப்போது கேட்டரிங் ஆர்டர் அதிகமாக வருவதால், ராஜசேகர் அடிக்கடி வெளி ஊர்களுக்கு செல்வது வழக்கம். கடையைப் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால், தனது உறவினரும் உடன் வேலை செய்பவருமான ஜெகதீசனை கடையைப் பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக கடையில் ஜெகதீஸ் வேலை செய்யாமல் குடிபோதையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தகராறு செய்து சரியாக கடையை நடத்தாததாக தெரிகிறது.

இதனால் ராஜசேகர் மற்றும் பிரகாஷ் இருவரும் நேற்று காலை இது சம்பந்தமாக ஜெகதீசனிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் மாலை ஜெகதீஸ் வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சமாதானப்படுத்தி அக்கம்பக்கத்தில் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, ஜெகதீசன் மாலை நரசிபுரம் ரோடு குபேரபுரி டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்து உள்ளார். அப்போது அங்கு சென்ற பிரகாஷ் மற்றும் ராஜசேகர் மீண்டும் ஜெகதீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜெகதீசன் வலது கை, இடது கால், வயிறு உள்ளிட்ட மூன்று இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். அங்கு மது குடித்துக் கொண்டிருந்த சிலர் பார்த்து பதறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

உடனடியாக பாரில் வேலை செய்பவர்கள் தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொண்டாமுத்தூர் போலீசார் ஜெகதீசன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெகதீசன் தாயார் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், ராஜசேகர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...