ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி..!

கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின் தற்போது முதல் முறையாக சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.


நீலகிரி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின், தற்போது முதல் முறையாக சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரியில், கொரோனா ஊரடங்கின் போது, சுற்றுலா பயணிகள் வரவும், சினிமா படப்பிடிப்பு நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பின், சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்பு நடத்த தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தமிழ் சினிமாவுக்கான படப்பிடிப்பு நடந்தது. இதனால், தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில்,

''ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்பு தோட்டக்கலை அனுமதியுடன் நடந்து வருகிறது.

நாளொன்றுக்கு, 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது,'' என்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...