கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின் தற்போது முதல் முறையாக சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
நீலகிரி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின், தற்போது முதல் முறையாக சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரியில், கொரோனா ஊரடங்கின் போது, சுற்றுலா பயணிகள் வரவும், சினிமா படப்பிடிப்பு நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பின், சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்பு நடத்த தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தமிழ் சினிமாவுக்கான படப்பிடிப்பு நடந்தது. இதனால், தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில்,
''ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்பு தோட்டக்கலை அனுமதியுடன் நடந்து வருகிறது.
நாளொன்றுக்கு, 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது,'' என்றார்.
நீலகிரியில், கொரோனா ஊரடங்கின் போது, சுற்றுலா பயணிகள் வரவும், சினிமா படப்பிடிப்பு நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பின், சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்பு நடத்த தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தமிழ் சினிமாவுக்கான படப்பிடிப்பு நடந்தது. இதனால், தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில்,
''ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்பு தோட்டக்கலை அனுமதியுடன் நடந்து வருகிறது.
நாளொன்றுக்கு, 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது,'' என்றார்.