கோவையில் ஒட்டகப் பால் டீக்கடை...!

கோவை சூலூர் அடுத்த நீலம்பூர் புறவழிச் சாலையில், மணிகண்டன் என்பவர் ஒட்டகங்களைக் கொண்டு பால் பொருள்கள் விற்பனை செய்யும் ஒட்டக பால் பண்ணையை தொடங்கியுள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் ஒட்டகப் பண்ணையில் பால் கறந்து அதில் தேநீர் விற்பனை செய்யும் டீக்கடை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கோவை சூலூர் அடுத்த நீலம்பூர் புறவழிச் சாலையில், மணிகண்டன் என்பவர் ஒட்டகங்களைக் கொண்டு பால் பொருள்கள் விற்பனை செய்யும் ஒட்டக பால் பண்ணையை தொடங்கியுள்ளார். இந்த பண்ணையில் ஒட்டகங்கள் தவிர குதிரை, முயல், வாத்து, கோழி ஆகியவை வளர்க்கப்பட்டு வருகின்றன.



காலை மற்றும் மாலை வேளைகளில் ஒட்டகத்திலிருந்து பால் கறந்து நேரடியாகதேநீர் விற்பனை நடைபெறுகிறது. பண்ணையை பார்வையிட பொதுமக்களிடம் 20 ரூபாய் நுழைவுக்கட்டணமாகவசூலிக்கப்படுகிறது.இங்கு ஒரு கப் டீ 70 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் பால் 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பண்ணை உரிமையாளர் மணிகண்டன் பேசும்போது, ஒட்டகப் பாலை கொண்டு பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், பண்ணையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.



குஜராத் மாநிலத்திலுள்ள கட்ச் மாவட்டத்தில் இருந்து 6 ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டது எனவும்,

எல்லா சூழலிலும் வாழக்கூடிய வகையில் ஒட்டகங்கள் இருப்பதால், இங்கு சிரமமின்றி பராமரிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறிய அவர், ஒட்டகம் மற்றும் குதிரை சவாரி பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாகவும்தெரிவித்தார்.



கடந்த 2000 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிக் கொடி கட்டு என்ற திரைப்படத்தில் டீ மாஸ்டரிடம் ஒட்டகப் பாலில் டீ போடுமாறு நடிகர் வடிவேலு கூறும் நகைச்சுவை காட்சியை மெய்ப்பிக்கும் வகையில் கோவையில் ஒட்டகப் பால் டீ விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...