கோவை வழியாக தினமும் மும்பைக்கு பறக்குது மதுரை மல்லி: மாதம்தோறும் 200-டன் புக்கிங்

மாதம்தோறும் 200-க்கும் அதிகமான டன் மதுரை மல்லி கோவையிலிருந்து மும்பைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், உலக நாடுகளுக்கும் பல்வேறு விதமான கார்கோ பொருட்கள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மதுரை புகழ் குண்டுமல்லி கோவை வழியாக தினமும் 1 டன் மும்பைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-

கோவை விமான நிலையத்தில் இருந்து இன்ஜினியரிங் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், துரித உணவு வகைகள், பூக்கள், மருத்துவ உபகரணங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கார்கோ பொருட்கள் புக்கிங் செய்யப்பட்டு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

உள் நாட்டு போக்குவரத்து பிரிவின் கீழ் கோவையில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் விமானத்தில் மதுரை மல்லிகை பூ சராசரியாக ஒரு டன் மற்றும் அதற்கு மேல் தினமும் புக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

மாதம்தோறும் 200க்கும் அதிகமான டன் மதுரை மல்லி கோவையிலிருந்து மும்பைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மும்பையில் வசிக்கும் தமிழர்கள் மதுரை மல்லி மீது கொண்டுள்ள ஆசையே தினமும் கோவை வழியாக மல்லிகைப்பூ விமானத்தில் கொண்டு செல்வதற்கு காரணமாக உள்ளது."

இவ்வாறு ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...