கோவை மாநகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதைக் குறைக்க “பசுமை செங்கல்” என்னும் புதிய இயக்கம்..!

கோவை மாநகராட்சியில் உள்ள 12 சேகரிப்பு மையங்களில் சனிக்கிழமை அன்று பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்து சம்பாதிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுவதைக் குறைக்க “பசுமை செங்கல்” என்னும் இயக்கத்தை அறிவித்துள்ளது.

கோவை மக்கள் இனி கோவை மாநகராட்சியின் (சிசிஎம்சி) மூலம் நகரம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ‘பசுமை செங்கல்’ சேகரிப்பு மையங்களில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சம்பாதிக்கலாம்.

கோவை மாநகராட்சி ரெசிடென்ட்ஸ் அவேர்னெஸ் அசோசியேஷன் (RAAC) மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பிப்ரவரி 26 அன்று ‘பசுமை செங்கல்' என்னும் முயற்சியைத் துவங்கியுள்ளது.

கோவை மாநகராட்சியில் அமையப்பெற்றுள்ள 12 சேகரிப்பு மையங்களில் சனிக்கிழமை அன்று மக்கள் தங்களிடம் இருக்கும் பிளாஸ்டிக்குகளை கொண்டு சென்று ஒப்படைக்கலாம். மேலும், பிப்ரவரி 26, 2022ம் ஆண்டு துவங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 26 வரை ஒவ்வொரு வாரமும் இந்த செய்யல்பாடானது நடைபெறும்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

‘பசுமை செங்கல்’ தயாரிக்க, ஒன்று அல்லது இரண்டு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் உலர் பிளாஸ்டிக் ரேப்பர்களை நசுக்கி, அடைத்து கீழே தள்ள வேண்டும். ஒரு லிட்டருக்கும் குறைவான பாட்டில்கள் அல்லது ஈரமான மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் அதிகாரிகளால் நிராகரிக்கப்படுகின்றன.

தோராயமாக 4 - 5 கிலோ எடையுள்ள ஒவ்வொரு பச்சை செங்கலுக்கும் 5 ரூபாய் கிடைக்கும் என தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...