முழு உடல் பரிசோதனை முகாமில் நாள் ஒன்றுக்கு 30 நபர்கள் வீதம் 1500 தூய்மை பணியாளர்களுக்கு இந்தப் பரிசோதனையானது நடைபெற்று வருகின்றது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை மையம் இன்று தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையம் தலைவர் வெங்கடேசன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கோவை அரசு மருத்துவமனையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை மையம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமாரால் கோவை அரசு மருத்துவமனையில் துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி சார்பில் 100 வார்டுகளில் பணி செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முழு உடல் பரிசோதனை முகாமில் நாள் ஒன்றுக்கு 30 நபர்கள் வீதம் 1500 தூய்மை பணியாளர்களுக்கு இந்தப் பரிசோதனையானது நடைபெற்று வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள முழு உடல் பரிசோதனை மையத்தில் இன்று நடத்தப்படும் முழு உடல் பரிசோதனை தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையம் தலைவர் வெங்கடேசன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இப்பரிசோதனையில் பெண் தூய்மை பணியாளர்களிடம் உங்களுக்கு சரிவர பரிசோதனைகள் நடைபெற்றனவா என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களையும் அவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சியின் சமூக சுகாதார அதிகாரியும் பங்கேற்றார்.