திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடைப்பெற்ற மகளிர் தின விழாவில் மாநகராட்சி பெண் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சார்பில், மகளிர் தின விழா இன்று வெகுவாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி சார்பில், மாநகராட்சி பெண் ஊழியர்கள் கலந்து கொண்ட மகளிர் தின விழா, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
இதுகுறித்து மேயர் தினேஷ்குமார் விழாவைத் துவக்கி வைத்துப் பேசியதாவது:-

பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்புகளில் 30-சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு தற்போது 40-சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகள் முழுவதும் பெண் ஆசிரியர்கள் நியமனம். உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு. பேறுகால விடுப்பு ஓராண்டாக உயர்வு.

திருப்பூர் மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு புதிய நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது. வருகின்ற நாட்களில் புதிய திருப்பூரை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி சார்பில், மாநகராட்சி பெண் ஊழியர்கள் கலந்து கொண்ட மகளிர் தின விழா, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
இதுகுறித்து மேயர் தினேஷ்குமார் விழாவைத் துவக்கி வைத்துப் பேசியதாவது:-
பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்புகளில் 30-சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு தற்போது 40-சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகள் முழுவதும் பெண் ஆசிரியர்கள் நியமனம். உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு. பேறுகால விடுப்பு ஓராண்டாக உயர்வு.
திருப்பூர் மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு புதிய நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது. வருகின்ற நாட்களில் புதிய திருப்பூரை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.