திருப்பூர் மாநகராட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடைப்பெற்ற மகளிர் தின விழாவில் மாநகராட்சி பெண் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சார்பில், மகளிர் தின விழா இன்று வெகுவாக கொண்டாடப்பட்டது.



திருப்பூர் மாநகராட்சி சார்பில், மாநகராட்சி பெண் ஊழியர்கள் கலந்து கொண்ட மகளிர் தின விழா, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

இதுகுறித்து மேயர் தினேஷ்குமார் விழாவைத் துவக்கி வைத்துப் பேசியதாவது:-



பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்புகளில் 30-சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு தற்போது 40-சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகள் முழுவதும் பெண் ஆசிரியர்கள் நியமனம். உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு. பேறுகால விடுப்பு ஓராண்டாக உயர்வு.



திருப்பூர் மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு புதிய நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது. வருகின்ற நாட்களில் புதிய திருப்பூரை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...