உலக மகளிர் தின நிகழ்ச்சியில் மகளிருக்கு அரசு மானியத்துடன் ரூ.90.80-லட்சம் மதிப்பிலான கடன் ஒப்பளிப்பு ஆணைகள் மற்றும் காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வினீத் வழங்கினார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உலக மகளிர் தின நிகழ்ச்சியில் மகளிருக்கு அரசு மானியத்துடன் ரூ.90.80-லட்சம் மதிப்பிலான கடன் ஒப்பளிப்பு ஆணைகள் மற்றும் காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினீத் பேசும்போது தெரிவித்ததாவது, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற "உலக மகளிர் தினம்" நிகழ்ச்சியில் மகளிருக்கு அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மகளிருக்கு ரூ.90.80 லட்சம் மதிப்பிலான கடன் ஒப்பளிப்பு ஆணைகள் மற்றும் காசோலைகள் ஆகியவற்றை வழங்கப்பட்டது.

பிரதமரின் சுய வேலைவாய்ப்பு மற்றும் (Stand up India) திட்டத்தின் கீழ் 1 மகளிருக்கு ரூ.6.25 இலட்சம் மானியத்துடன் ரூ.25.00 இலட்சம் முதலீட்டில் தொழில் துவங்க மற்றும் 6-மகளிர் உதவிக் குழுக்களுக்கு ரூ.49.00-லட்சமும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.11.30-லட்சமும், கல்விக் கடன் ரூ.2.50-லட்சமும், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் 3-குழுக்களுக்கு தலா ரூ.1.00-லட்சம் வீதம் 3.00-லட்சம் வழங்கப்பட்டது.

திட்டத்தின் கீழ் மேலும் கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி பயிற்சி நிறைவு பெற்ற மகளிர்க்கும் பயிற்சி நிறைவு பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மகளிருக்கு அரசின் மானியம் மற்றும் வங்கி கடன் உதவி திட்டங்கள் மற்றும் பிரதமரின் தனி நபர் காப்பீட்டுத் திட்டம் பொதுமக்களைச் சென்ற அடைய வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் பூபதிராஜா, மகளிர் திட்டம் இணை இயக்குனர் மதுமதி மற்றும் நபார்டு வங்கி மேலாளர் ராஜீ 15. வேலம்பாளையம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வெள்ளகோவில் கனரா வங்கி முதன்மை மேலாளர்கள் மற்றும் இமைகள் அறக்கட்டளை நிறுவனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.