உலக மகளிர் தினம்: அரசு மானியத்துடன் ரூ.90.80-லட்சம் மதிப்பிலான கடன் ஒப்பளிப்பு ஆணைகள் மற்றும் காசோலை வழங்கல்

உலக மகளிர் தின நிகழ்ச்சியில் மகளிருக்கு அரசு மானியத்துடன் ரூ.90.80-லட்சம் மதிப்பிலான கடன் ஒப்பளிப்பு ஆணைகள் மற்றும் காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வினீத் வழங்கினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உலக மகளிர் தின நிகழ்ச்சியில் மகளிருக்கு அரசு மானியத்துடன் ரூ.90.80-லட்சம் மதிப்பிலான கடன் ஒப்பளிப்பு ஆணைகள் மற்றும் காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.



இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினீத் பேசும்போது தெரிவித்ததாவது, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற "உலக மகளிர் தினம்" நிகழ்ச்சியில் மகளிருக்கு அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மகளிருக்கு ரூ.90.80 லட்சம் மதிப்பிலான கடன் ஒப்பளிப்பு ஆணைகள் மற்றும் காசோலைகள் ஆகியவற்றை வழங்கப்பட்டது.



பிரதமரின் சுய வேலைவாய்ப்பு மற்றும் (Stand up India) திட்டத்தின் கீழ் 1 மகளிருக்கு ரூ.6.25 இலட்சம் மானியத்துடன் ரூ.25.00 இலட்சம் முதலீட்டில் தொழில் துவங்க மற்றும் 6-மகளிர் உதவிக் குழுக்களுக்கு ரூ.49.00-லட்சமும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.11.30-லட்சமும், கல்விக் கடன் ரூ.2.50-லட்சமும், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் 3-குழுக்களுக்கு தலா ரூ.1.00-லட்சம் வீதம் 3.00-லட்சம் வழங்கப்பட்டது.



திட்டத்தின் கீழ் மேலும் கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி பயிற்சி நிறைவு பெற்ற மகளிர்க்கும் பயிற்சி நிறைவு பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மகளிருக்கு அரசின் மானியம் மற்றும் வங்கி கடன் உதவி திட்டங்கள் மற்றும் பிரதமரின் தனி நபர் காப்பீட்டுத் திட்டம் பொதுமக்களைச் சென்ற அடைய வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் பூபதிராஜா, மகளிர் திட்டம் இணை இயக்குனர் மதுமதி மற்றும் நபார்டு வங்கி மேலாளர் ராஜீ 15. வேலம்பாளையம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வெள்ளகோவில் கனரா வங்கி முதன்மை மேலாளர்கள் மற்றும் இமைகள் அறக்கட்டளை நிறுவனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...