விசாரணையில், குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநரைக் கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை குனியமுத்தூர் செங்குளம் அருகே கடந்த டிசம்பர் 31ம் தேதி, உடலில் காயங்களுடன் இளைஞர் ஒருவர் சடலமாகக் கிடந்தார். அவரது உடலை மீட்டு குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வாசு என்பதும், அவர் ஆட்டோ ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. போலீசார் வாசுவை கொலை செய்தது யார் என்று குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (22) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சம்பவத்தன்று குடிபோதையில் இருவரும் மாறி மாறி தகராறில் ஈடுபட்ட போது, முகமது ரியாஸ் வாசுவை கல்லால் தாக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை குனியமுத்தூர் செங்குளம் அருகே கடந்த டிசம்பர் 31ம் தேதி, உடலில் காயங்களுடன் இளைஞர் ஒருவர் சடலமாகக் கிடந்தார். அவரது உடலை மீட்டு குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வாசு என்பதும், அவர் ஆட்டோ ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. போலீசார் வாசுவை கொலை செய்தது யார் என்று குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (22) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சம்பவத்தன்று குடிபோதையில் இருவரும் மாறி மாறி தகராறில் ஈடுபட்ட போது, முகமது ரியாஸ் வாசுவை கல்லால் தாக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.