கோவையில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநரைக் கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபர் கைது..!

விசாரணையில், குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநரைக் கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் செங்குளம் அருகே கடந்த டிசம்பர் 31ம் தேதி, உடலில் காயங்களுடன் இளைஞர் ஒருவர் சடலமாகக் கிடந்தார். அவரது உடலை மீட்டு குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வாசு என்பதும், அவர் ஆட்டோ ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. போலீசார் வாசுவை கொலை செய்தது யார் என்று குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்தின் பேரில் குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (22) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சம்பவத்தன்று குடிபோதையில் இருவரும் மாறி மாறி தகராறில் ஈடுபட்ட போது, முகமது ரியாஸ் வாசுவை கல்லால் தாக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...