மேலும், 3 மாதங்களுக்கு போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் கோடை காலத்தையொட்டி போக்குவரத்து காவலர்களுக்கு குளிர் பானங்கள் வழங்கும் நிகழ்வினை மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தார்.
கோடைக்காலம் துவங்கிய நிலையில் கோவை மாவட்டத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு வருடம்தோறும் குளிர்பானங்கள் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, இவ்வாண்டும் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்வினை கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார்.

கோவை அண்ணாசிலை சிக்னல் பகுதியில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட காவல் ஆணையர் போக்குவரத்து காவலர்களுக்கு இளநீர், நீர்மோர், பழச்சாறு ஆகியவற்றை வழங்கினார். உடன் துணை ஆணையர் உமா கலந்து கொண்டு குளிர்பானங்களை வழங்கினார்.

இதே நிகழ்வில், மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக மகளிர் காவலர்கள் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
மேலும், 3 மாதங்களுக்கு போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோடைக்காலம் துவங்கிய நிலையில் கோவை மாவட்டத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு வருடம்தோறும் குளிர்பானங்கள் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, இவ்வாண்டும் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்வினை கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார்.
கோவை அண்ணாசிலை சிக்னல் பகுதியில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட காவல் ஆணையர் போக்குவரத்து காவலர்களுக்கு இளநீர், நீர்மோர், பழச்சாறு ஆகியவற்றை வழங்கினார். உடன் துணை ஆணையர் உமா கலந்து கொண்டு குளிர்பானங்களை வழங்கினார்.
இதே நிகழ்வில், மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக மகளிர் காவலர்கள் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
மேலும், 3 மாதங்களுக்கு போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.