கோவை ஆலாந்துறை தனியார் கயிறு குடோன் தீ விபத்து விவகாரம் - தனியார் தோட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

கோவை ஆலாந்துறை தனியார் கயிறு குடோன் தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது தொடர்பாக, தனியார் தோட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஆலாந்துறை தனியார் கயிறு குடோன் தீ விபத்து விவகாரம் தொடர்பாக, தனியார் தோட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகபிரகாசம் (50). இவர் அதே பகுதியில் தேங்காய் நார் கயிறு உற்பத்தி தொழிற்சாலை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகபிரகாசத்தின் கயிறு உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.



இதையடுத்து அங்கு வந்த தொண்டாமுத்தூர் தீணைப்பு துறையினர். தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் அங்கிருந்த தேங்காய் நாறு கயிறுகள், தென்னை மரங்கள், மற்றும் மூன்று மின் மோட்டார்கள் என ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கயிறு தொழிற்சாலை அருகே உள்ள தோட்டத்தின் உரிமையாளரான துளசியம்மாள் (70) சம்பவத்தன்று தோட்டத்திலிருந்த சறுக்குகள், மரத்துண்டுகள் போன்ற கழிவுகளை ஒன்றாகப் போட்டு தீவைத்து எரித்துள்ளார்.

அப்போது அதிலிருந்து வந்த தீப்பொறிகள் அருகாமையிலிருந்த சண்முகபிரகாசம் கயிறு உற்பத்தி தொழிற்சாலையில் தீ பிடித்தது தெரியவந்தது. இதனால் ஆலந்துறை போலீசார் துளசியம்மாள் மீது (IPC 285 ) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...