அங்கு பார் வசதி இல்லாததால் மதுபானம் வாங்கும் பலரும் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு போய்விடுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை: கோவை பீளமேடு உரக்கிடங்கு பின்புறம் உள்ள மதுபான கடையை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை பீளமேடு பகுதியில் மகாலிங்கம் என்பவர் பந்தல் நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பீளமேடு பகுதியில் உள்ள மதுபான கடையை அகற்றக் கோரி மனு அளித்தார்.
அப்பகுதியில் இன்டஸ்ட்ரியல் ஏரியா உரக்கிடங்கு பின்புறம் உள்ள மதுபானக்கடையில் 24 மணி நேரமும் விற்பனை நடைபெறுவதாகவும், அங்கு பார் வசதி இல்லாததால் மதுபானம் வாங்கும் பலரும் அங்கே மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு போய்விடுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அப்பகுதியில் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் எனவே அதனை அவ்விடத்திலிருந்து அகற்றி வேறு இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் மகாலிங்கம் என்பவர் பந்தல் நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பீளமேடு பகுதியில் உள்ள மதுபான கடையை அகற்றக் கோரி மனு அளித்தார்.
அப்பகுதியில் இன்டஸ்ட்ரியல் ஏரியா உரக்கிடங்கு பின்புறம் உள்ள மதுபானக்கடையில் 24 மணி நேரமும் விற்பனை நடைபெறுவதாகவும், அங்கு பார் வசதி இல்லாததால் மதுபானம் வாங்கும் பலரும் அங்கே மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு போய்விடுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அப்பகுதியில் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் எனவே அதனை அவ்விடத்திலிருந்து அகற்றி வேறு இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.