குடும்ப சண்டையில் தொழிலாளியை மனைவி, மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் சிங்காநல்லூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே குடும்பத் தகராறில் கணவரை வெட்டி கொலை செய்த மனைவி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்த நிலையில் அவரது மகனையும் போலீசார் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (55). இவர் ஒரு தச்சு தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (50).
இந்நிலையில், நாராயணசாமியின் மூத்த மகன் ராஜ்குமார் மனைவிக்கு நீலிகோணாம்பாளையம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது நாராயணசாமி தனது பெண் நண்பர் ஒருவரையும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி ராஜேஷ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த போது மீண்டும் ராஜேஷ்வரி, ராஜ்குமார் ஆகியோர் நாராயணசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாராயணசாமி, ராஜேஸ்வரியை தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி, ராஜ்குமார் இருவரும் வீட்டிலிருந்த கத்தியால் நாராயணசாமியை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, ராஜேஸ்வரி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து, தகவலை தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் ராஜ்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
குடும்ப சண்டையில் தொழிலாளியை மனைவி, மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (55). இவர் ஒரு தச்சு தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (50).
இந்நிலையில், நாராயணசாமியின் மூத்த மகன் ராஜ்குமார் மனைவிக்கு நீலிகோணாம்பாளையம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது நாராயணசாமி தனது பெண் நண்பர் ஒருவரையும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி ராஜேஷ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த போது மீண்டும் ராஜேஷ்வரி, ராஜ்குமார் ஆகியோர் நாராயணசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாராயணசாமி, ராஜேஸ்வரியை தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி, ராஜ்குமார் இருவரும் வீட்டிலிருந்த கத்தியால் நாராயணசாமியை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, ராஜேஸ்வரி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து, தகவலை தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் ராஜ்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
குடும்ப சண்டையில் தொழிலாளியை மனைவி, மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.