கோவையில் குடும்ப தகராறில் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை - மனைவி காவல் நிலையத்தில் சரண்; மகன் கைது..!

குடும்ப சண்டையில் தொழிலாளியை மனைவி, மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் சிங்காநல்லூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே குடும்பத் தகராறில் கணவரை வெட்டி கொலை செய்த மனைவி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்த நிலையில் அவரது மகனையும் போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (55). இவர் ஒரு தச்சு தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (50).

இந்நிலையில், நாராயணசாமியின் மூத்த மகன் ராஜ்குமார் மனைவிக்கு நீலிகோணாம்பாளையம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது நாராயணசாமி தனது பெண் நண்பர் ஒருவரையும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி ராஜேஷ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த போது மீண்டும் ராஜேஷ்வரி, ராஜ்குமார் ஆகியோர் நாராயணசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாராயணசாமி, ராஜேஸ்வரியை தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி, ராஜ்குமார் இருவரும் வீட்டிலிருந்த கத்தியால் நாராயணசாமியை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, ராஜேஸ்வரி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து, தகவலை தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் ராஜ்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

குடும்ப சண்டையில் தொழிலாளியை மனைவி, மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...