கோவையில் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்சோவில் கைது..!

கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


கோவை: கோவையில் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கோவையில் தங்கி, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரின் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் மணிகண்டனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, விசாரணையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

பின்னர், அவர் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...