கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோவை: கோவையில் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கோவையில் தங்கி, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரின் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் மணிகண்டனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, விசாரணையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
பின்னர், அவர் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கோவையில் தங்கி, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரின் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் மணிகண்டனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, விசாரணையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
பின்னர், அவர் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.