கோவை பேரூர் 14வது வார்டு உறுப்பினர் தனது வெற்றியைக் கொண்டாடும் விதமாக 60 முதியோர்களுக்கு உணவு தானம்..!

சமையல் வேலை செய்து வரும் 14 வது வார்டு உறுப்பினர் மணிமேகலை செட்டிபாளையம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு தானம் வழங்கினார்.


கோவை: கோவை பேரூர் பேரூராட்சியில் 14வது வார்டில் வெற்றி பெற்ற மணிமேகலை தனது வெற்றியைக் கொண்டாடும் விதமாக முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு தானம் கொடுத்துக் கொண்டாடினார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பல்வேறு வகையில் தங்கள் வெற்றியைக் கொண்டாடியும், வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை பேரூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 12 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. குறிப்பாக 15 வார்டுகளிலும் திமுக சார்பில் இளநீர் வியாபாரி, தினக்கூலி, சமையல் வேலை செய்து வருவோர் என சாமானிய கட்சி தொண்டர்களுக்கு திமுக வாய்ப்பு வழங்கியது.

அதில், 14 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மணிமேகலை என்பவர், சமையல் வேலை செய்து வருகிறார். தற்போது கவுன்சிலராகவும் பதவி ஏற்றுள்ளார்.



தற்போது, இவர் தனது வெற்றியைக் கொண்டாடும் விதமாக பேரூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வரும் 60 முதியோருக்கு உணவு தானம் வழங்கி தனது வெற்றியைக் கொண்டாடினார்.



மேலும், அவர்களுக்கு என்ன தேவை என்றாலும் உடனடியாக செய்து கொடுக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...