மக்களின் தேவை அறிந்து ஆட்சி செய்கிற திமுக அணி மாபெரும் வெற்றி பெறும் - கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன்

நடைபெற்று வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாநகராட்சி 67வது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அவரது இணையர் வனஜா நடராஜனுடன் தனது வாக்கினை செலுத்தினார்.



கோவை: நடைபெற்று வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாநகராட்சி 67வது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அவரது இணையர் வனஜா நடராஜனுடன் தனது வாக்கினை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் நடைபெறுகிற இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களின் பேராதரவை பெற்ற அணியாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உள்ளது. இந்த அணி அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து பதவிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பெறும். இது தமிழக மக்களின் மனநிலையில் இருந்து தெளிவாக தெரிகிறது. தமிழக முதலமைச்சர், மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன் என்று அளித்துள்ள உறுதி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது.

ஆகவே, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து அனைத்து இடங்களையும் மாபெரும் வெற்றியை பெறும் என உறுதியாக நான் நம்புகிறேன்" என்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...