'75 மாணவர்கள் செயற்கைகோள் பணித்திட்டம்' - கற்பகம் கல்வி நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு

கற்பகம் கல்வி நிறுவனம் “75 மாணவர்கள் செயற்கைகோள் பணித்திட்டம்” என்னும் திட்டத்தின் கீழ் இன்று கற்பகம் உயர்கல்விக்கழக மேலாண்மைத்துறை அரங்கில் ஒரு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது.


கோவை: இந்திய அரசு தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் “75-மாணவர்கள் செயற்கைகோள் பணித்திட்டம்” என்னும் அமைப்பில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட 75-செயற்கைகோள்களை ஆகஸ்டு 2022-இல் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.

கற்பகம் கல்வி நிறுவனம் “75 மாணவர்கள் செயற்கைகோள் பணித்திட்டம்” என்னும் திட்டத்தின் கீழ் 18.02.2022 வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 3.30-மணியளவில் கற்பகம் உயர்கல்விக்கழக மேலாண்மைத்துறை அரங்கில் ஒரு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது.



இந்நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ பேரா. R.M. வாசகம், ஆப்பிள் செயற்கைகோள் திட்டத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர் K. கோபாலகிருஷ்ணன், கற்பகம் உயர்கல்விக்கழக துணைவேந்தர் முனைவர் சேது.சுடலைமுத்து, கற்பகம் உயர்கல்விக்கழக வேந்தர் முனைவர் இராச.வசந்தகுமார், கற்பகம் கல்வி நிறுவனத்தின் முதன்மைச் செயலர் க.முருகையா மற்றும் பதிவாளர் முனைவர் மு.பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழிப்புணர்வு நிகழ்வானது உலகரங்கில் விண்வெளித்துறையில் இந்தியா தலைசிறந்து விளங்க விண்வெளி, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி புதிய திட்டங்களை செயற்படுத்தி வருவதைப் பற்றியும், மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்கும் விதமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், செயற்கைகோள் செய்முறைகள் பற்றிய விளக்கக் காட்சிகள் அமைந்திருந்தன.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக கற்பகம் கல்வி நிறுவனம் “கற்பகம்சாட்” என்னும் செயற்கைகோளை கற்பகம் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்த இந்திய தொழில்நுட்ப காங்கிரஸ் சங்கத்தின் திட்ட இயக்குநருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இவ்விழிப்புணர்வு நிகழ்வில் கற்பகம் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் 160-கல்லூரிகளில் முதற் கல்லூரியாக கற்பகம் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தயாரித்த 1500 கிராம் எடையுள்ள செயற்கைக் கோள் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...