திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக வேட்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் போத்தனூர் காவல்நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர்.
கோவை: கோவை மாநகராட்சி 100-வது வார்டில் தோல்வி பயத்தில் அதிமுக வேட்பாளர் திமுகவினர் மீது தாக்குதல் நடத்தினர்.
கோவை மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடை பெறுவதைத் தொடர்ந்து நேற்றுடன் பிரச்சாரம் நிரைவடந்த நிலையில், கோவை மாநகராட்சி 100-வது வார்டில் திமுக சார்பில் வேட்பாளர் கார்த்திகேயன் போட்டியிடுகின்றனர்.
அதனை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் வேணுகோபால், மேட்டூர் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்திற்குள் புகுந்த திமுகவினரைத் தாக்கியும், திமுக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக திமுகவினர் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 2 திமுகவினர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக வேட்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் போத்தனூர் காவல்நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர்.
மேலும் இதுதொடர்பாக திமுக நிர்வாகி கூறுகையில்:-
திமுகவினர் தமிழக முதல்வரின் சாதனைகளைக் கூறி சிறப்பாக வாக்கு சேகரித்துள்ளனர். இதனால், திமுக மகத்தான வெற்றியைப் பெற உள்ளது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாத,100-வது வார்டு அதிமுக வேட்பாளர் வேணுகோபால் திமுகவினரைத் தாக்கியும், திமுக அலுவலகத்தைச் சூறையாடியும் உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம். காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளனர். நாங்கள் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி கலைந்து செல்கிறோம் என்றார்.
கோவை மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடை பெறுவதைத் தொடர்ந்து நேற்றுடன் பிரச்சாரம் நிரைவடந்த நிலையில், கோவை மாநகராட்சி 100-வது வார்டில் திமுக சார்பில் வேட்பாளர் கார்த்திகேயன் போட்டியிடுகின்றனர்.
அதனை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் வேணுகோபால், மேட்டூர் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்திற்குள் புகுந்த திமுகவினரைத் தாக்கியும், திமுக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக திமுகவினர் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 2 திமுகவினர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக வேட்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் போத்தனூர் காவல்நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர்.
மேலும் இதுதொடர்பாக திமுக நிர்வாகி கூறுகையில்:-
திமுகவினர் தமிழக முதல்வரின் சாதனைகளைக் கூறி சிறப்பாக வாக்கு சேகரித்துள்ளனர். இதனால், திமுக மகத்தான வெற்றியைப் பெற உள்ளது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாத,100-வது வார்டு அதிமுக வேட்பாளர் வேணுகோபால் திமுகவினரைத் தாக்கியும், திமுக அலுவலகத்தைச் சூறையாடியும் உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம். காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளனர். நாங்கள் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி கலைந்து செல்கிறோம் என்றார்.