தோல்வி பயத்தில் அதிமுக வேட்பாளர் திமுகவினர் மீது தாக்குதல் - அதிமுக வேட்பாளரைக் கைது செய்ய வலியுறுத்தி கோவையில் திமுகவினர் சாலைமறியல்!!

திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக வேட்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் போத்தனூர் காவல்நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர்.


கோவை: கோவை மாநகராட்சி 100-வது வார்டில் தோல்வி பயத்தில் அதிமுக வேட்பாளர் திமுகவினர் மீது தாக்குதல் நடத்தினர்.

கோவை மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடை பெறுவதைத் தொடர்ந்து நேற்றுடன் பிரச்சாரம் நிரைவடந்த நிலையில், கோவை மாநகராட்சி 100-வது வார்டில் திமுக சார்பில் வேட்பாளர் கார்த்திகேயன் போட்டியிடுகின்றனர்.

அதனை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் வேணுகோபால், மேட்டூர் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்திற்குள் புகுந்த திமுகவினரைத் தாக்கியும், திமுக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக திமுகவினர் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 2 திமுகவினர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக வேட்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் போத்தனூர் காவல்நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர்.

மேலும் இதுதொடர்பாக திமுக நிர்வாகி கூறுகையில்:-

திமுகவினர் தமிழக முதல்வரின் சாதனைகளைக் கூறி சிறப்பாக வாக்கு சேகரித்துள்ளனர். இதனால், திமுக மகத்தான வெற்றியைப் பெற உள்ளது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாத,100-வது வார்டு அதிமுக வேட்பாளர் வேணுகோபால் திமுகவினரைத் தாக்கியும், திமுக அலுவலகத்தைச் சூறையாடியும் உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம். காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளனர். நாங்கள் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி கலைந்து செல்கிறோம் என்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...