பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்..!

கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால் வனப்பகுதியில் வறட்சி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



கோவை: கோவை பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில், வனவிலங்குகளுக்காக தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக் கோட்டத்தில், பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய 4 சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தைப் புலி, மான்கள், சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் வசித்து வருகின்றன.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால், வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென பசுமையாக காட்சியளித்தது.

தொடர் மழை காரணமாக வனப்பகுதியில் உள்ள நீரோடைகள், தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி காணப்பட்டது. வனம் பசுமையாக இருந்ததால், வனவிலங்குகள் உணவு தேவை பூர்த்தி அடைந்து வந்தது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால், வனப்பகுதியில் வறட்சி தொடங்கியுள்ளது. அடர் வனத்தில் உள்ள நீர் ஓடைகள் வறண்டு போனதால், உணவு மற்றும் நீருக்காக யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.



இதனால், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்பேரில், உலாந்தி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில், டாப்சிலிப் வனப்பகுதியில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து, நீர் நிரப்பும் பணிகளில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...