கோவையில் தேர்தல் தேதி ஆரம்பித்த நாளிலிருந்து, கரூர் மற்றும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து, திமுகவினர் பல்வேறு இடங்களில் மிரட்டல்கள் விடுவதால், தேர்தல் நியாயமாக நடைபெற துணை இராணுவப் படையினரை நியமிக்க வேண்டும் - கோவை அதிமுக.
கோவை: கோவையில் தேர்தல் தேதி ஆரம்பித்த நாளிலிருந்து, கரூர் மற்றும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து, திமுகவினர் பல்வேறு இடங்களில் மிரட்டல்கள் விடுவதால், தேர்தல் நியாயமாக நடைபெற துணை இராணுவப் படையினரை நியமிக்க வேண்டும், என்று அதிமுக சார்பில் கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட அதிமுகவினர், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி ஆணைக்கிணங்க கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், "நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுகவினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும், வன்முறை செயல்களில் திமுக வினர் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பறக்கும் படையினர் காவல்துறையினர் திமுகவினருக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர் .எனவே, இந்த தேர்தல் நியாயமாக நடப்பதற்கு துணை ராணுவ படையினரை நியமிக்க வேண்டும்", என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், தேர்தல் தேதி ஆரம்பித்த நாளிலிருந்து திமுகவினர் கரூர் மற்றும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மிரட்டல்கள் விடுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போட வேண்டும், என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்ட அதிமுகவினர், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி ஆணைக்கிணங்க கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், "நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுகவினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும், வன்முறை செயல்களில் திமுக வினர் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பறக்கும் படையினர் காவல்துறையினர் திமுகவினருக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர் .எனவே, இந்த தேர்தல் நியாயமாக நடப்பதற்கு துணை ராணுவ படையினரை நியமிக்க வேண்டும்", என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், தேர்தல் தேதி ஆரம்பித்த நாளிலிருந்து திமுகவினர் கரூர் மற்றும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மிரட்டல்கள் விடுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போட வேண்டும், என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.