கோவையில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, பாதுகாப்பை பலப்படுத்த துணை ராணுவப் படையை நியமிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம், அதிமுகவினர் மனு

கோவையில் தேர்தல் தேதி ஆரம்பித்த நாளிலிருந்து, கரூர் மற்றும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து, திமுகவினர் பல்வேறு இடங்களில் மிரட்டல்கள் விடுவதால், தேர்தல் நியாயமாக நடைபெற துணை இராணுவப் படையினரை நியமிக்க வேண்டும் - கோவை அதிமுக.


கோவை: கோவையில் தேர்தல் தேதி ஆரம்பித்த நாளிலிருந்து, கரூர் மற்றும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து, திமுகவினர் பல்வேறு இடங்களில் மிரட்டல்கள் விடுவதால், தேர்தல் நியாயமாக நடைபெற துணை இராணுவப் படையினரை நியமிக்க வேண்டும், என்று அதிமுக சார்பில் கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்ட அதிமுகவினர், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி ஆணைக்கிணங்க கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.



அவர்கள் அளித்த மனுவில், "நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுகவினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும், வன்முறை செயல்களில் திமுக வினர் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பறக்கும் படையினர் காவல்துறையினர் திமுகவினருக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர் .எனவே, இந்த தேர்தல் நியாயமாக நடப்பதற்கு துணை ராணுவ படையினரை நியமிக்க வேண்டும்", என குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், தேர்தல் தேதி ஆரம்பித்த நாளிலிருந்து திமுகவினர் கரூர் மற்றும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மிரட்டல்கள் விடுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போட வேண்டும், என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...