கோவையில் கிறிஸ்தவ தேவாலய சிலை உடைப்பு பள்ளி மாணவன் உள்பட 2 பேர் கைது

கோவையில் கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் இருந்த சிலையை உடைத்த வழக்கில் பள்ளி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் இருந்த சிலையை உடைத்த வழக்கில் பள்ளி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவையில் கடந்த 23-ஆம் தேதி ராமநாதபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வாசலில் அமைந்துள்ள செபஸ்தியர் சிலையை மர்ம நபர்கள் உடைத்துச் சேதப்படுத்திச் சென்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் லாரி ஓட்டுநரையும் பத்தாம் வகுப்பு மாணவனையும் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையில் கிறிஸ்தவ தேவாலய சிலை உடைப்பு தொடர்பாக, இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, ராமநாதபுரத்தில் ஹோலி டிரினிட்டி சர்ச் உள்ளது. இங்கு கடந்த 23ம் தேதி இரவு, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத சிலர், தேவாலயம் முன்பகுதியில் இருந்த செபஸ்தியர் சிலை இருந்த கண்ணாடி பெட்டகத்தை உடைத்து, சிலையைச் சேதப்படுத்தினர்.

இதையடுத்து, கிறிஸ்தவ தேவாலய பாதிரியார் அளித்த புகாரின் அடிப்படையில், ராமநாதபுரம் போலீசார் குற்றவாளிகளைத் தேடிவந்தனர். நேற்று வெள்ளலுார் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மதன்குமார், 23 மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...