கோவையில் கிறிஸ்தவ தேவாலய சிலை உடைப்பு பள்ளி மாணவன் உள்பட 2 பேர் கைது

கோவையில் கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் இருந்த சிலையை உடைத்த வழக்கில் பள்ளி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் இருந்த சிலையை உடைத்த வழக்கில் பள்ளி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவையில் கடந்த 23-ஆம் தேதி ராமநாதபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வாசலில் அமைந்துள்ள செபஸ்தியர் சிலையை மர்ம நபர்கள் உடைத்துச் சேதப்படுத்திச் சென்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் லாரி ஓட்டுநரையும் பத்தாம் வகுப்பு மாணவனையும் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையில் கிறிஸ்தவ தேவாலய சிலை உடைப்பு தொடர்பாக, இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, ராமநாதபுரத்தில் ஹோலி டிரினிட்டி சர்ச் உள்ளது. இங்கு கடந்த 23ம் தேதி இரவு, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத சிலர், தேவாலயம் முன்பகுதியில் இருந்த செபஸ்தியர் சிலை இருந்த கண்ணாடி பெட்டகத்தை உடைத்து, சிலையைச் சேதப்படுத்தினர்.

இதையடுத்து, கிறிஸ்தவ தேவாலய பாதிரியார் அளித்த புகாரின் அடிப்படையில், ராமநாதபுரம் போலீசார் குற்றவாளிகளைத் தேடிவந்தனர். நேற்று வெள்ளலுார் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மதன்குமார், 23 மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...