கோவை பவர் ஹவுஸ் முதல் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் வரை இரு சக்கர வாகன பேரணியில் பிப்ரவரி 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த கோரிக்கைகளை முன்மொழிந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கோவை: குடியரசு தின விழாவை முன்னிட்டு, கோவையில் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து இரு சக்கர வாகன பேரணியை மேற்கொண்டனர். கோவை பவர் ஹவுஸ் முதல் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் வரை இரு சக்கர வாகன பேரணியானது நடைபெற்றது.

பேரணியில், கலந்துகொண்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அவர்களின் சங்கங்களின் கொடியினை வாகனங்களில் கட்டியவாறு பேரணி மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு பிப்ரவரி 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த கோரிக்கைகளை முன்மொழிந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

"தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிடு, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்காதே, பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்திடு, வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் நிவாரணம் வழங்கு, கான்டெக்ட் தொழிலாளிகளை நிரந்தரமாக சம ஊதியம் வழங்கு" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கபட்டது.
கோவையில் இன்று நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்கள் இருசக்கர வாகன பேரணி காவல்துறை அனுமதியை மீறி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பேரணியில், கலந்துகொண்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அவர்களின் சங்கங்களின் கொடியினை வாகனங்களில் கட்டியவாறு பேரணி மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு பிப்ரவரி 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த கோரிக்கைகளை முன்மொழிந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
"தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிடு, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்காதே, பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்திடு, வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் நிவாரணம் வழங்கு, கான்டெக்ட் தொழிலாளிகளை நிரந்தரமாக சம ஊதியம் வழங்கு" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கபட்டது.
கோவையில் இன்று நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்கள் இருசக்கர வாகன பேரணி காவல்துறை அனுமதியை மீறி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.