73 வது குடியரசு தினவிழா: கோவை மாநகராட்சி ஆணையர் தேசிய கொடி ஏற்றி மரியாதை; சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு சான்றிதழ்.

கொடி ஏற்றுவதற்கு முன்னதாக மாநகராட்சி அலுவலகத்திலுள்ள காந்தி சிலைக்கு அணிவகுப்பு நடத்தி மாலை அணிவித்தார். பின்னர், சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கி ஆணையர் கௌரவித்தார்.



கோவை: கோவை மாநகராட்சியில் இன்று 73வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநகராட்சி ஆணையர், ராஜகோபால் சுங்கரா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.



முன்னதாக, மாநகராட்சி அலுவலகத்திலுள்ள தேசத்தந்தை, காந்தி அடிகளாரின் சிலைக்கு அணிவகுப்பு நடத்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



அதனை தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கார சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கி கௌரவித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர், "கோவை மாநகராட்சியில் 2வது முறை தேசிய கொடி ஏற்ற வாய்ப்பு கிடைத்தது மிக நெகிழ்ச்சியானது ஆகும். கோவைக்கு தனி சிறப்பும், வரலாறும் உள்ளது. பெருமைமிக்க, கோவை மாநகராட்சியில், பணியாற்றுவதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். இந்தியாவின் சிறந்த நகரமாக, நற்பெயருடன் கோவை விளங்க வேண்டும் என்பதே என் ஆசை.



தற்போது, நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால், நாம் சிறப்பாக பணியாற்ற வேண்டும். மக்கள் பிரதிநிதியாக பணியாற்றும் நாம் அனைவரும், சிறப்பாக மக்கள் சேவை ஆற்ற வேண்டும்", என்றார்.



விழாவில், கோவை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா, மாநகராட்சியின் அனைத்து துறையின் தலைமை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...