கோவை அருகே முககவசம் அணியாத நகைக்கடை உரிமையாளரை காரமடை காவல்துறை வழக்குப்பதிவு செய்து தொற்றுநோய் தடுப்பு சட்டம், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.
கோவை: கோவை அருகே முககவசம் அணியாத நகைக்கடை உரிமையாளரை காரமடை காவல்துறை வழக்குப்பதிவு செய்து தொற்றுநோய் தடுப்பு சட்டம், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் மூன்றாவது அலை தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் வெளியே செல்லும் போது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா என கண்காணிக்கக் கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டிருந்தது.
காரமடை நகராட்சி சுகாதார ஆய்வாளராக பணியாற்றுபவர் மாரியப்பன் வயது 58, நேற்று மாலை இவர் காரமடை சொர்க்க வாசல் வீதி வழியாக உள்ள பகுதிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணித்தார்.
அப்போது அந்த பகுதியில் நகைக் கடை வைத்து நடத்தி வருபவர் மேட்டுப்பாளையம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த முகமது நவ்பிக் 28 - என்பவர் முக கவசம் அணியாமல் இருந்தார்.
இதனை கேட்ட சுகாதார ஆய்வாளர் மாரியப்பனை தகாத வார்த்தையால் பேசியது குறித்து சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் காரமடை காவல்துறையில் புகார் செய்தார்.
இதை தொடர்ந்து காரமடை காவல்துறை வழக்குப்பதிவு செய்து தொற்றுநோய் தடுப்பு சட்டம் அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் மூன்றாவது அலை தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் வெளியே செல்லும் போது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா என கண்காணிக்கக் கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டிருந்தது.
காரமடை நகராட்சி சுகாதார ஆய்வாளராக பணியாற்றுபவர் மாரியப்பன் வயது 58, நேற்று மாலை இவர் காரமடை சொர்க்க வாசல் வீதி வழியாக உள்ள பகுதிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணித்தார்.
அப்போது அந்த பகுதியில் நகைக் கடை வைத்து நடத்தி வருபவர் மேட்டுப்பாளையம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த முகமது நவ்பிக் 28 - என்பவர் முக கவசம் அணியாமல் இருந்தார்.
இதனை கேட்ட சுகாதார ஆய்வாளர் மாரியப்பனை தகாத வார்த்தையால் பேசியது குறித்து சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் காரமடை காவல்துறையில் புகார் செய்தார்.
இதை தொடர்ந்து காரமடை காவல்துறை வழக்குப்பதிவு செய்து தொற்றுநோய் தடுப்பு சட்டம் அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.