வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 



இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வடவள்ளியில் பேருந்துகள் நிறுத்துமிடம் உள்ளது. பேருந்துகள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால், உத்தேச பேருந்து திருப்புமுனையம் போதுமான வகையில் பேருந்துகள் இடையூரின்றி நுழையும் வசதி மற்றும் வெளியேறும் வசதி ஏற்படுத்தும் வகையில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து இன்று (06.01.2017) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், வடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகிலும் மற்றும் மருதமலை சாலையிலிருந்து உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமையும் நுழைவாயிற் பகுதியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் சர்வே செய்து அப்புறப்படுத்தவும், பேருந்துகள் நுழைவுப் பகுதியிலுள்ள மிகப்பழமையான கழிப்பிடங்களையும் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான சிறு கடைகளையும் அகற்றி மாற்று ஏற்பாடு செய்தும், பேருந்து நிலையம் உள் பகுதியில் நுழைய இடவசதி ஏற்படுத்தும்படியும் திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...