வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 



இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வடவள்ளியில் பேருந்துகள் நிறுத்துமிடம் உள்ளது. பேருந்துகள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால், உத்தேச பேருந்து திருப்புமுனையம் போதுமான வகையில் பேருந்துகள் இடையூரின்றி நுழையும் வசதி மற்றும் வெளியேறும் வசதி ஏற்படுத்தும் வகையில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து இன்று (06.01.2017) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், வடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகிலும் மற்றும் மருதமலை சாலையிலிருந்து உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமையும் நுழைவாயிற் பகுதியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் சர்வே செய்து அப்புறப்படுத்தவும், பேருந்துகள் நுழைவுப் பகுதியிலுள்ள மிகப்பழமையான கழிப்பிடங்களையும் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான சிறு கடைகளையும் அகற்றி மாற்று ஏற்பாடு செய்தும், பேருந்து நிலையம் உள் பகுதியில் நுழைய இடவசதி ஏற்படுத்தும்படியும் திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...