உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி கிணற்றில் விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டியில் மாயமான கூலித்தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டி மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பெரியகுப்பம் (77) கூலித் தொழிலாளியான இவர், கடந்த 15ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை, மேலும் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து பெரியகுப்பனின் உறவினர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், கொண்டம்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக கிணத்துக்கடவு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கிணற்றில் கிடந்த முதியவரின் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் பெரியகுப்பம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி கிணற்றில் விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டி மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பெரியகுப்பம் (77) கூலித் தொழிலாளியான இவர், கடந்த 15ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை, மேலும் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து பெரியகுப்பனின் உறவினர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், கொண்டம்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக கிணத்துக்கடவு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கிணற்றில் கிடந்த முதியவரின் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் பெரியகுப்பம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி கிணற்றில் விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.