பொள்ளாச்சி அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பறந்து போய் விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.
கோவை: பொள்ளாச்சி அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பறந்து போய் விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.
கோவை அருகே உள்ள மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் மற்றும் ராஜசேகரன் இருவரும் பழனி பாதயாத்திரை செல்லும் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்காக நேற்று மாலை மதுக்கரையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
பொள்ளாச்சி - உடுமலை சாலையில் செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற போது G.சங்கம்பாளையத்தை சேர்ந்த கௌதம் என்பவர் காரில் பொள்ளாச்சி நோக்கி வந்த பொழுது எதிர்பாராதவிதமாக பைக் மீது கார் மோதியதில் ஜோதீஸ்வரன், ராஜசேகர் இருவரும் பறந்து சென்று விழுந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
விபத்தில ராஜசேகர் சிறிய காயங்களுடனும் ஜோதிஷ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் காரை ஓட்டி வந்த கௌதம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.