இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தலித் இளைஞரை தாக்கிய நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
கோவை: பொள்ளாச்சி அருகே தலித் வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள மக்கள் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஹரிஹரசுதாகர். இவர் அதே பகுதியில் தனியார் தோற்றத்தில் பணியாற்றி வந்தபோது அங்கு பணியாற்றும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பல்வேறு காரணங்களுக்காக அவர் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பெண்ணை பார்ப்பதற்காக இரவு தோட்டத்திற்குச் சென்றபோது, அங்கு பணியாற்றி வந்த சில ஹரிஹரசுதாகரை, தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலித் இளைஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பல்வேறு அமைப்புகள் சார்பாக ஆனைமலை முக்கோணம் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தலித் இளைஞரை தாக்கிய நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.