திருப்பூரில் ஊரடங்கை மதிக்காமல் சாலையில் சுற்றுபவர்களுக்கு அபராதம்

திருப்பூரில் முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூரில் முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கொரோனா தொற்று பரவலைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில் முழு ஊரடங்கு தினமான இன்று திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து விசாரணைக்குப் பின்னரே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்களை அனுமதித்து வருகின்றனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சி அருகே ஆட்டோவில் அளவுக்கதிகமான வட மாநிலத் தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆட்டோவிற்கு அபராதமும் விதித்தனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கொரோனா வேடமிட்டு மாநகராட்சி அருகில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...