திருப்பூரில் ஊரடங்கை மதிக்காமல் சாலையில் சுற்றுபவர்களுக்கு அபராதம்

திருப்பூரில் முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூரில் முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கொரோனா தொற்று பரவலைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில் முழு ஊரடங்கு தினமான இன்று திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து விசாரணைக்குப் பின்னரே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்களை அனுமதித்து வருகின்றனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சி அருகே ஆட்டோவில் அளவுக்கதிகமான வட மாநிலத் தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆட்டோவிற்கு அபராதமும் விதித்தனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கொரோனா வேடமிட்டு மாநகராட்சி அருகில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...