காவல்நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழாவை காவலர்கள் விமர்சையாக கொண்டாடினர். இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி கலந்துகொண்டு புது பானையில் பொங்கல் வைத்தும், காவலர்கள் புத்தாடை அணிந்து பாரம்பரிய முறைப்படி கொண்டாடினர்.
கோவை: பொள்ளாச்சி பகுதிகளில் காவல்நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழாவை காவலர்கள் விமர்சையாக கொண்டாடினர்.

தைத்திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பொங்கல் விழாவைப் பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட கிராமப்புறங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் ஒரு தாய் மக்கள் தான் என்பதை வலியுறுத்தும் விதமாகப் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி கலந்துகொண்டு புது பானையில் பொங்கல் வைத்தும், காவலர்கள் புத்தாடை அணிந்து பாரம்பரிய முறைப்படி கொண்டாடினர்.
இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு அனைத்து மதத்தினரும் ஒரு தாய் மக்கள் தான் என்பதை வலியுறுத்தும் விதமாகக் கொண்டாடினர்.
தைத்திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பொங்கல் விழாவைப் பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட கிராமப்புறங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் ஒரு தாய் மக்கள் தான் என்பதை வலியுறுத்தும் விதமாகப் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி கலந்துகொண்டு புது பானையில் பொங்கல் வைத்தும், காவலர்கள் புத்தாடை அணிந்து பாரம்பரிய முறைப்படி கொண்டாடினர்.
இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு அனைத்து மதத்தினரும் ஒரு தாய் மக்கள் தான் என்பதை வலியுறுத்தும் விதமாகக் கொண்டாடினர்.