ஆந்திராவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1-கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ஆந்திராவிலிருந்து தேனி மற்றும் கோவை மாவட்டத்திற்கு காரில் கடத்தி வரப்பட்ட 1-கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 7-பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: ஆந்திராவிலிருந்து தேனி மற்றும் கோவை மாவட்டத்திற்கு காரில் கடத்தி வரப்பட்ட 1-கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 7-பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திராவிலிருந்து, தேனி மற்றும் கோவை மாவட்டத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்ததுடன், அதில் சம்பந்தப்பட்ட, 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்திய, மூன்று காரும் பறிமுதல் செய்யப்பட்டது,'' என, நாமக்கல் எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் கூறினார்.

இது குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் - கரூர் புறவழிச்சாலை, முதலைப்பட்டி அருகில், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, நாமக்கல் எஸ்.ஐ., முருகன் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

விசாரணையில், காரில் இருந்தவர்கள், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், 49, ஜெயச்சந்திரன், 67, முகேஷ், 29 என்பதும், ஆந்திரா மாநிலத்திலிருந்து, தேனி மாவட்டத்துக்கு, கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 200 கிலோ கஞ்சாவும், காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, சேலம் - கோவை புறவழிச்சாலை, குமாரபாளையம் கத்தேரி ஜங்சன் அருகில், இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் நடந்த வாகன சோதனையில், அவ்வழியாக வந்த, இரண்டு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

விசாரணையில், கோவை குனியமுத்தூர் கிஷார்குமார், 30, உக்கடம் அப்துல் ஜலீல், 30, முஜீப் ரகுமான், 29, சுல்தான், 29 என்பதும், ஆந்திரா மாநிலத்திலிருந்து கோவைக்கு, கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.



இந்த இரண்டு சோதனையிலும், மொத்தம், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 300 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும், மூன்று கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த, 2021ல், 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யததுடன், 7 பேர் குண்டாஸில் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...