நேற்று இரவு முழுவதும் பஜனை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இன்று காலை ஸ்ரீ ரங்கநாதனுக்கு சந்தன காப்பு சிறப்பு அலங்காரம் செய்தபின் சிறப்பு பூஜைகள் செய்து காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதி சரவணா நகர் ஸ்ரீரங்கநாதர் வீரமாச்சி அம்மன் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நேற்று இரவு முழுவதும் பஜனை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இன்று காலை ஸ்ரீ ரங்கநாதனுக்கு சந்தன காப்பு சிறப்பு அலங்காரம் செய்தபின் சிறப்பு பூஜைகள் செய்து காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து விண்ணை முட்டும் அளவிற்கு "கோவிந்தா கோவிந்தா" என்று போற்றினர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் ரங்கநாதர் படுத்துக்கொண்டு அருள்பாலிப்பது போலவே கோவையில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் வீரமாச்சி அம்மன் திருக்கோவிலில் படுத்துக்கொண்டு அருள்பாலிப்பது இந்த கோவிலின் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.