வரி வசூலை மேம்படுத்த கோவை மாநகராட்சி பிரச்சாரம்..!!

நடப்பு ஆண்டில் ரூபாய் 206.02 வரி வசூல் செய்யவேண்டிய இடத்தில், இதுவரை ரூபாய் 108.79 கோடி பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரி வசூலை மேம்படுத்த விழிப்புணர்வு வாகனங்களைப் பயன்படுத்தி, பிரச்சாரத்தை கோவை மாநகராட்சி தொடங்கியுள்ளது.


கோவை: 2021-22க்கான நிதியாண்டு இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், சொத்து வரி வசூலை மேம்படுத்த கோவை மாநகராட்சி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

கடந்த ஜனவரி 10 ஆம் தேதி நிலவரப்படி, மாநகராட்சியில் 53 சதவீதம் வரி வசூல் செய்யபட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ரூபாய் 206.02 வரி வசூல் செய்யவேண்டிய இடத்தில், இதுவரை ரூபாய் 108.79 கோடி, கோவை மாநகராட்சி வசூலித்துள்ளது. இந்த நிலையில், வரி வசூலை மேம்படுத்தவும், வரி செலுத்தவும், சொத்து வரி செலுத்துவதற்கு வலியுறுத்தும் வகையில், விழிப்புணர்வு வாகனங்களைப் பயன்படுத்தி, பிரச்சாரத்தை மாநகராட்சி தொடங்கியுள்ளது என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, பில் கலெக்டர்களை சந்தித்து வரி செலுத்தாதவர்களின் பட்டியலை, மாநகராட்சி தயாரித்து வருகின்றது. வரி பாக்கி ரூபாய் 167.27 கோடியாகவும், நிலுவைத் தொகை ரூபாய் 53.31 கோடியாக உள்ளது. நிலுவையில் உள்ள வரியை வசூல் செய்ய, மக்கள் மத்தியில் பிரச்சாரம் மூலம் கோவை மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது.

இதனிடையே, சொத்துவரி கோரிக்கை பட்டியலை ஆய்வு செய்யும் பணியை மாநகராட்சி சமீபத்தில் மேற்கொண்டுள்ளது. நவம்பர் 30, 2021 நடந்த கூட்டத்தில், மாநகராட்சி ஐந்து மண்டலங்களிலும் 8,000 க்கும் மேற்பட்ட சொத்து வரி செலுத்தாத கட்டிடங்கள் இடிக்கப்பட்டது என்றும் மேலும், கண்டுபிடிக்க முடியாத சொத்து போன்றவற்றை நீக்க முடிவு செய்துள்ளதாகக் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, ஐந்து மண்டலங்களில் உள்ள அதிகாரிகள் அத்தகைய மதிப்பீடுகளை அடையாளம் காண வீடு வீடாகச் சென்று பட்டியலைக் தயாரித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. மதிப்பீட்டின் கீழ் வசூலிக்க வேண்டிய பணம் ரூபாய் 13.12 கோடி என்று மதிப்பீடு செய்யபட்டுள்ளது, என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிகின்றன.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...