ஆனைமலையில் தலித் இளைஞரைத் தாக்கியவர்களைக் கைது செய்யக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 8-மணி நேரமாகக் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கோவை: ஆனைமலையில் தலித் இளைஞரைத் தாக்கியவர்களைக் கைது செய்யக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 8-மணி நேரமாகக் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மக்கள் சக்தி நகர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹர சுதாகரன், அதே பகுதியில் மேஜர் ராமசாமி என்பவரது தோட்டத்தில் பணியாற்றி வந்தார்.
அங்கிருந்து சில காரணங்களுக்காக அவர் பணியிலிருந்து நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இவர், அதே தோட்டத்தில் பணியாற்றி வந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹரிஹர சுதாகரன் அந்தப்பெண்ணைப் பார்ப்பதற்காகத் தோட்டத்திற்குள் சென்றதாகத் தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, அந்த தோட்டத்தில் பணியாற்றும் சிலர் ஹரிஹர சுதாகரை கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிகிறது. இதில், காயமடைந்த ஹரிஹர சுதாகர் வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய நபர்களைக் கைது செய்ய கோரி, இன்று காலை, கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால், தொடர்ந்து 8-மணி நேரமாகச் சார் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில், செல்போன் விளக்குகளை ஒளிர வைத்து போராட்டக்காரர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும், சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்கப் போவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மக்கள் சக்தி நகர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹர சுதாகரன், அதே பகுதியில் மேஜர் ராமசாமி என்பவரது தோட்டத்தில் பணியாற்றி வந்தார்.
அங்கிருந்து சில காரணங்களுக்காக அவர் பணியிலிருந்து நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இவர், அதே தோட்டத்தில் பணியாற்றி வந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹரிஹர சுதாகரன் அந்தப்பெண்ணைப் பார்ப்பதற்காகத் தோட்டத்திற்குள் சென்றதாகத் தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, அந்த தோட்டத்தில் பணியாற்றும் சிலர் ஹரிஹர சுதாகரை கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிகிறது. இதில், காயமடைந்த ஹரிஹர சுதாகர் வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய நபர்களைக் கைது செய்ய கோரி, இன்று காலை, கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால், தொடர்ந்து 8-மணி நேரமாகச் சார் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில், செல்போன் விளக்குகளை ஒளிர வைத்து போராட்டக்காரர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும், சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்கப் போவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.