தலித் இளைஞரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி பொள்ளாச்சியில் காத்திருப்பு போராட்டம்

ஆனைமலையில் தலித் இளைஞரைத் தாக்கியவர்களைக் கைது செய்யக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 8-மணி நேரமாகக் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.


கோவை: ஆனைமலையில் தலித் இளைஞரைத் தாக்கியவர்களைக் கைது செய்யக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 8-மணி நேரமாகக் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மக்கள் சக்தி நகர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹர சுதாகரன், அதே பகுதியில் மேஜர் ராமசாமி என்பவரது தோட்டத்தில் பணியாற்றி வந்தார்.

அங்கிருந்து சில காரணங்களுக்காக அவர் பணியிலிருந்து நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இவர், அதே தோட்டத்தில் பணியாற்றி வந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹரிஹர சுதாகரன் அந்தப்பெண்ணைப் பார்ப்பதற்காகத் தோட்டத்திற்குள் சென்றதாகத் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, அந்த தோட்டத்தில் பணியாற்றும் சிலர் ஹரிஹர சுதாகரை கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிகிறது. இதில், காயமடைந்த ஹரிஹர சுதாகர் வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய நபர்களைக் கைது செய்ய கோரி, இன்று காலை, கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால், தொடர்ந்து 8-மணி நேரமாகச் சார் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில், செல்போன் விளக்குகளை ஒளிர வைத்து போராட்டக்காரர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும், சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்கப் போவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...