பொள்ளாச்சியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தந்தை பெரியார் சிலையை அவமதித்த சம்பவத்தைக் கண்டித்து பொள்ளாச்சியில், பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: தந்தை பெரியார் சிலையை அவமதித்த சம்பவத்தைக் கண்டித்து பொள்ளாச்சியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியார் சிலைக்குக் காவி பொடி வீசியும், செருப்பு மாலை அணிவித்தும் மர்ம கும்பல் அவமரியாதை செய்தது. இந்த சம்பவத்தைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகப் பெரியார் சிலையை அவமதித்த செயலை கண்டித்தும் இந்த செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பெரியார் திராவிடர் கழகம், மக்கள் விடுதலை முன்னணி, திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு பெரியார் சிலையை அவமதிப்பு செய்து வருகிறார்கள். இவர்களுக்கு காவல்துறையும் நீதிமன்றமும் துணை போகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பெரியார் சிலையை அவமதித்த வரிகளே இது கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...