தந்தை பெரியார் சிலையை அவமதித்த சம்பவத்தைக் கண்டித்து பொள்ளாச்சியில், பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: தந்தை பெரியார் சிலையை அவமதித்த சம்பவத்தைக் கண்டித்து பொள்ளாச்சியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியார் சிலைக்குக் காவி பொடி வீசியும், செருப்பு மாலை அணிவித்தும் மர்ம கும்பல் அவமரியாதை செய்தது. இந்த சம்பவத்தைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகப் பெரியார் சிலையை அவமதித்த செயலை கண்டித்தும் இந்த செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பெரியார் திராவிடர் கழகம், மக்கள் விடுதலை முன்னணி, திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு பெரியார் சிலையை அவமதிப்பு செய்து வருகிறார்கள். இவர்களுக்கு காவல்துறையும் நீதிமன்றமும் துணை போகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பெரியார் சிலையை அவமதித்த வரிகளே இது கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவை வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியார் சிலைக்குக் காவி பொடி வீசியும், செருப்பு மாலை அணிவித்தும் மர்ம கும்பல் அவமரியாதை செய்தது. இந்த சம்பவத்தைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகப் பெரியார் சிலையை அவமதித்த செயலை கண்டித்தும் இந்த செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பெரியார் திராவிடர் கழகம், மக்கள் விடுதலை முன்னணி, திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு பெரியார் சிலையை அவமதிப்பு செய்து வருகிறார்கள். இவர்களுக்கு காவல்துறையும் நீதிமன்றமும் துணை போகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பெரியார் சிலையை அவமதித்த வரிகளே இது கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.