கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு: எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.


கோவை: பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.

அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி கொரடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஈவேராவின் திருவுருவச் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர்.

இதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார் தமிழகம் மட்டுமன்றி உலக நாடுகளில் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.

இவரது பகுத்தறிவு பிரச்சாரத்தால், தமிழகத்தில் பெண் உரிமை விடுதலை விதவைகள் மறுமணம் இட ஒதுக்கீடு ஜாதி சமய வேறுபாடற்ற சமுதாயம் அமையவும், தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பகுத்தறிவைப் பரப்பி மக்களிடையே சுயமரியாதை விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

இத்தகைய பெருமைக்குரியவரை அவமதித்த சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு சமூக விரோதிகளுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...