பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.
கோவை: பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.
அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி கொரடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஈவேராவின் திருவுருவச் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர்.
இதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார் தமிழகம் மட்டுமன்றி உலக நாடுகளில் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
இவரது பகுத்தறிவு பிரச்சாரத்தால், தமிழகத்தில் பெண் உரிமை விடுதலை விதவைகள் மறுமணம் இட ஒதுக்கீடு ஜாதி சமய வேறுபாடற்ற சமுதாயம் அமையவும், தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பகுத்தறிவைப் பரப்பி மக்களிடையே சுயமரியாதை விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
இத்தகைய பெருமைக்குரியவரை அவமதித்த சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு சமூக விரோதிகளுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி கொரடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஈவேராவின் திருவுருவச் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர்.
இதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார் தமிழகம் மட்டுமன்றி உலக நாடுகளில் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
இவரது பகுத்தறிவு பிரச்சாரத்தால், தமிழகத்தில் பெண் உரிமை விடுதலை விதவைகள் மறுமணம் இட ஒதுக்கீடு ஜாதி சமய வேறுபாடற்ற சமுதாயம் அமையவும், தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பகுத்தறிவைப் பரப்பி மக்களிடையே சுயமரியாதை விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
இத்தகைய பெருமைக்குரியவரை அவமதித்த சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு சமூக விரோதிகளுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.